விமானப்படை தளங்களுக்கு இடையிலான வருடாந்த கோல்ப் இடைநிலை போட்டிகள்
2023 ம்  ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்கு இடையிலான வருடாந்த கோல்ப் இடைநிலை போட்டிகள்  கடந்த 2023 டிசம்பர் 06ம்  திகதி  ஈகிள் கேடலினா கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிநிகழ்வில்  விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமும் இலங்கை விமானப்படை கோல்ப் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இலங்கை விமானப்படைசீனக்குடா விமானப்படை கல்லூரி ஒட்டு மொத்த சம்பியன் பட்டத்தையும், விமானப்படை கட்டுநாயக்க தள  ரெஜிமென்ட் படைப்பிரிவு  இரண்டாம் இடத்தையும், கட்டுநாயக்க விமானப்படை தளம் மூன்றாம் இடத்தையும் வென்றன.

பொது நலன்புரி பணிப்பாளர், எயார் வைஸ் மார்ஷல் சுரேஷ் பெர்னாண்டோ, விளையாட்டுப் பணிப்பாளர், குரூப் கப்டன் சமந்த வீரசேகர, பெருநகரப் பல்கலைக்கழகத்தின் தாளாளர், விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து கோல்ப் வீரர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை