
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விமானப்படைத் தளபதியை சந்தித்தனர்.
இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் திரு. கப்டன் இயன் கேன், உதவிச் செயலாளர் ஷான் ஸ்ட்ரக்னெல் மற்றும் திரு. ஜோசப் பர்ன் ஆகியோரைக் கொண்ட மூன்று பேர் கொண்ட தூதுக்குழுவினர் 2023 டிசம்பர் 07ம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவைச் சந்தித்தனர்.
பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வை நினைவுகூரும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.







