
முதலாவது 2023 ம் ஆண்டுக்கான தெற்காசிய ஓபன் டேக்வாண்டோ சர்வதேச சாம்பியன்ஷிப்பில் இலங்கை விமானப்படை வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சர்வதேச டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2023 டிசம்பர் 10 முதல் 12 வரை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்வில், இலங்கை டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவர் திரு.சமிந்த புஞ்சிஹேவா, இலங்கை டேக்வாண்டோ சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு.ருவான் அலஹகோன், தேசிய ஒலிம்பிக் குழுவின் உப தலைவரும் சிரேஷ்ட உப தலைவருமான காஞ்சன ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை டேக்வாண்டோ கூட்டமைப்புசார்பாக இலங்கை விமானப்படை வீரர்கள் மொத்தம் 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.













