
2023 -தேசிய குத்துச்சண்டை பெண்கள் சாம்பியன்ஷிப்பை இலங்கை விமானப்படை பெண்கள் குத்துச்சண்டை அணி வென்றது
இலங்கை குத்துச்சண்டை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “96வது ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் -2023” கடந்த 2024 ஜனவரி 13 முதல் ஜனவரி 17 வரை கொழும்பு 07, ரோயல் மாஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு பெற்றவர்) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவம், கடற்படை, பொலிஸ் போன்ற இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட 25 விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றிய பல பிரபல குத்துச்சண்டை கழகங்களில் இருந்து 152க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த சம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டனர்.
இந்த சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படை மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் பெண்கள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.இரண்டு வெள்ளி மற்றும் ஒரு தங்கப்பதக்கத்துடன் 5 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று வெற்றியை பெற்று வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிப்படுத்தியமை விசேட அம்சமாகும்.
இலங்கை இராணுவம், கடற்படை, பொலிஸ் போன்ற இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட 25 விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றிய பல பிரபல குத்துச்சண்டை கழகங்களில் இருந்து 152க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த சம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டனர்.
இந்த சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படை மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் பெண்கள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.இரண்டு வெள்ளி மற்றும் ஒரு தங்கப்பதக்கத்துடன் 5 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று வெற்றியை பெற்று வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிப்படுத்தியமை விசேட அம்சமாகும்.
ஆண்கள் அணி மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. விருது வழங்கும் விழாவில் சிரேஷ்ட வான்படை வீராங்கனை பெரேரா "சிறந்த பெண் குத்துச்சண்டை வீரராக" தேர்வு செய்யப்பட்டார்.














