
இந்தியாவில் உள்ள ஜெர்மன் குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், உதவி பாதுகாப்பு ஆலோசகர், மற்றும்விமானப்படை தளபதி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு.
இந்தியாவில் உள்ள ஜேர்மன் குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் கிளாஸ் மேர்க்கல் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஆண்ட்ரே நீட்ஹோஃபர் ஆகியோர் 2024 பெப்ரவரி 05 அன்று விமானப்படை தலைமையகத்தில் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவு சின்னம்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.