
நேவல் ஷிப்பிங் சர்வீசஸ் லங்கா நிறுவனம் 'நட்பின் சிறகுகள் ' திட்டத்தை ஆதரிக்கிறது
கப்பல் சேவைகள் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.சுஜித் டயஸ், இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'நட்பின் சிறகுகள்' என்ற பிரதான திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார். ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதி நன்கொடையைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தலைமையகத்தில் 13 பெப்ரவரி 2024 அன்று விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகமும் கல்விக் கண்காட்சியின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் முதித மஹவத்தகே அவர்களிடம் அடையாள காசோலை கையளிக்கப்பட்டது.
இந்த விசேட நிகழ்வில் குரூப் கப்டன் உதார அந்தரடி மற்றும் விங் கமாண்டர் தாரக ஹேவவெல்லாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விசேட நிகழ்வில் குரூப் கப்டன் உதார அந்தரடி மற்றும் விங் கமாண்டர் தாரக ஹேவவெல்லாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

