
சிலோன் சொக்லேட் நிறுவனம் 'என்னிடமிருந்து ஒரு புத்தகம் வடக்கிற்கு' எழுத்தறிவு திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது.
இலங்கை சொக்லேட் கம்பனியின் நிதி மற்றும் திட்டமிடல் பிரிவின் வர்த்தக முகாமையாளர் திரு.பிரதீப் குடாகமகே அவர்கள் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் 'என்னிடமிருந்து வடக்கிற்கு ஒரு புத்தகம்' என்ற எழுத்தறிவு திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தகங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். 22 பெப்ரவரி 2024 அன்று சிலோன் சொக்லேட் கம்பனி லிமிடெட் அலுவலகத்தில் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் இவோன் விதாரண அவர்களிடம் நிதியுதவி கையளிக்கப்பட்டது. உபாலி குழுமத்தின் பணிப்பாளர்/ வர்த்தக நாமத் தலைவர் திருமதி கரிஸ்மா வெல்கம இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.