இலங்கை விமானப்படை 73 வது வருட நிறைவை கொண்டாடுகிறது
இலங்கை விமானப்படை 73வது ஆண்டு நிறைவை  (02 மார்ச் 2024)  அன்று அனைத்து விமானப்படை தளங்களும் உத்தியோகபூர்வமாக கொண்டாடியது. விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ அணிவகுப்புடன் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.


இதன்போது விமானப்படை தளபதியினால் உரைநிகழத்தப்பட்டதுடன் இந்த நிகழ்வுகள் அனைத்து விமானபடைத்தளங்களுக்கும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது

மிக உயர்ந்த தியாகம் செய்த அல்லது காயங்கள் காரணமாக மாற்றுத்திறனாளியாக இருந்த விமானப்படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி தளபதி தனது உரையை ஆரம்பித்தார். விமானப்படையின் கடந்தகால தளபதிகள், அதிகாரிகள்,  படைவீரர்கள்  மற்றும் சிவிலியன்கள், தங்கள் அர்ப்பணிப்பால்,  பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை முறியடித்து, நமது தீவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த விமானப்படைக்கு சக்தி அளித்ததையும் அவர் பாராட்டினார் . அதன் பின்பு விமானப்படையின் எதிர்கால நடவடிக்கைபற்றி உரையாற்றிய அவர்  இறுதியாக, அனைத்து விமானப்படை வீரர்களும், பெண்களும் 100% ஒழுக்கம், சிறப்பு மற்றும் நேர்மையுடன் தேசத்தின் அதிகபட்ச நன்மைக்காக பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை