பாதுகாப்புப் பதவிநிலை பிரதானி தலைமையில் 'AIR TATTOO 2024' தொழில்நுட்ப மற்றும் கல்விக் கண்காட்சியின் இரண்டாம் நாள் ஆரம்பம்.
'AIR TATTOO 2024' ' இன் இரண்டாம் நாள் தொழில்நுட்ப மற்றும் கல்வி கண்காட்சி 07 மார்ச் 2024 அன்று யாழ்ப்பாணம் முத்தரவெளி விளையாட்டரங்கில் பொதுமக்களுக்காக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இரண்டாவது நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கலந்துகொண்டதுடன், பிரதம அதிதியை எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அன்புடன் வரவேற்றார்.

இக்கண்காட்சியின் போது, ​​இலங்கையின் வருங்கால இளைஞர்களுடன் விமானப்படைத் தளபதி சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார், இந்த நிகழ்விற்காக, யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் திரு.டி.ஒய்.சுந்தராசன், விமானப்படையின் பிரதானி, விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மூவர். ஆயுதப்படை அதிகாரிகள், மற்ற விருந்தினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் குழு கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை