
இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவு மற்றும் ஃபெமிஸ் குழுவினருடன் இணைந்து பொலன்னறுவையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விமானப்படையின் வனிதா பிரிவு ஹெமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் ஃபெமிஸ் குழுவுடன் இணைந்து ஹிகுராக்கொடவில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் வழங்கும் நோக்கில் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ மற்றும் சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்ச்சி நேற்று மார்ச் 13, 2024 அன்று ஹிகுராக்கொட விஜயபுர மகா வித்தியாலயம் மற்றும் அம்பகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. வடமத்திய மாகாணத்தின் பிராந்தியக் கல்விப் பணிப்பாளரும் பிரதம சங்கநாயக்கருமான வணக்கத்திற்குரிய சிறிகெத சிறி சிவலி இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த 800 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றியதுடன், "சுவாசம் " திட்டத்தின் மூலம் வசதிகளை வழங்கும் திருமதி ஷெஹானி பியசேன அவர்களின் அன்பான ஆதரவுடன் சுகாதாரப் பொருட்கள் தாராளமாக நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் விமானப்படை ஹிகுராக்கொட தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் தினேஷ் ஜயவீர, விமானப்படை ஹிகுராக்கொட முகாம் சேவை வனிதா பிரிவின் தலைவர் திருமதி டிலானி சுரேகா ஜயவீர, விமானப்படை சேவை வனிதா பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Vijayapura Maha Vidyalaya
ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த 800 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றியதுடன், "சுவாசம் " திட்டத்தின் மூலம் வசதிகளை வழங்கும் திருமதி ஷெஹானி பியசேன அவர்களின் அன்பான ஆதரவுடன் சுகாதாரப் பொருட்கள் தாராளமாக நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் விமானப்படை ஹிகுராக்கொட தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் தினேஷ் ஜயவீர, விமானப்படை ஹிகுராக்கொட முகாம் சேவை வனிதா பிரிவின் தலைவர் திருமதி டிலானி சுரேகா ஜயவீர, விமானப்படை சேவை வனிதா பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Vijayapura Maha Vidyalaya
Ambagaswewa
Maha Vidyalaya