இலங்கை விமானப்படை கொடி ஆசீர்வாதம் பெரும் நிகழ்வு புனித 'ஜெய ஸ்ரீ மஹா போதி' யில் இடம்பெற்றது.
73 வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, இலங்கை விமானப்படை பாரம்பரிய கொடி ஆசீர்வாத விழா  2024 மார்ச் 14 அன்று  அனுராதபுரம் புனித "ஜெய ஸ்ரீ மஹா போதி" இல் நடத்தியது. இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உட்பட அனைத்துபடைத்தள  கட்டளை , கல்விப்பீட கட்டளை அதிகாரிகள்,  கலந்து கொண்டனர்.

முழு இலங்கை விமானப்படையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனுராதபுரம் விமானப்படை தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் விமானப்படை பதவிநிலை பிரதானி , பிரதிப் பதவிநிலை பிரதானி , விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், ஏனைய பதவிகள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை