அனுராதபுர இலங்கை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 6 ஹெலிகொப்டர் படைப்பிரிவு 31வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
அனுராதபுர இலங்கை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 6 ஹெலிகொப்டர் படைப்பிரிவு தனது 31வது ஆண்டு நிறைவை 2024 மார்ச் 15 அன்று சம்பிரதாய அணிவகுப்பு, விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் அனைத்து படைப்பிரிவு அதிகாரிகளுக்கும் மதிய உணவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது.

ஆண்டு நிறைவு கொண்டாட்டத்துடன் இணைந்து, அனுராதபுரம் பௌத்த சங்கத்தால் நடத்தப்படும் "அசோகா" அனாதை இல்லத்தில் துப்புரவு நிகழ்ச்சி 11 மார்ச் 2024 அன்று அனைத்து அணி உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. கட்டளை அதிகாரி விங் கமாண்டர் டீவி டி சில்வா அவர்களின் மேற்பார்வையில் இது இடம்பெற்றது. பின்னர் சிறுவர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன் அவர்களின் கல்விக்காக எழுதுபொருட்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர மற்றும் அனுராதபுரம் விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமித ஜயமஹா உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் கிரிக்கெட் போட்டியுடன் தின கொண்டாட்டம் நிறைவு பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை