
மட்டக்களப்பு விமானப்படை தளத்தினால் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டம்.
"நட்பின் சிறகுகள்" என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை ஒட்டி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 73 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைத்து மேம்படுத்தும் முயற்சியை இலங்கை விமானப்படை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு தளத்தை அண்மித்த பகுதியில் உள்ள வசதியற்ற ஏழு பாடசாலைகளை புனரமைப்பதற்கு விமானப்படை பங்களிப்பு செய்துள்ளது, இதன்படி மட்டக்களப்பு பிட்டி/பிடபிள்யூ/கண்ணன்குடா மகா வித்தியாலயத்தின் சம்பிரதாய கையளிப்பு மற்றும் திறப்பு விழா 02 ஏப்ரல் 2024 அன்று இடம்பெற்றது.
புனரமைக்கப்பட்ட மற்றும் வர்ணம் பூசப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழாவுடன் நிகழ்வு ஆரம்பமானது, அதைத் தொடர்ந்து மரம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சரத் பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு விமானப்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள், மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புனரமைக்கப்பட்ட மற்றும் வர்ணம் பூசப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழாவுடன் நிகழ்வு ஆரம்பமானது, அதைத் தொடர்ந்து மரம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சரத் பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு விமானப்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள், மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.