சிகிரியா விமானப்படைத்தில் வருடாந்த விமானப்படைத் தளபதியின் பரிசோதனை இடம்பெற்றது.
10:10pm on Tuesday 28th May 2024
இலங்கை   விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களினால்  கடந்த  2024  ஏப்ரல் 05ம் திகதி  சிகிரியா விமானப்படைத் தளத்தில் வருடாந்த ஆய்வு செய்தார்.

விமானப்படைத் தளபதியை கட்டளை அதிகாரி குரூப் கப்டன் எஸ்.வி.பிரேமவர்தன அவர்கள்  வரவேற்றதுடன், அணிவகுப்பு  மற்றும் பேண்ட் வாத்திய குழுவினரின் அணிவகுப்பு  மரியாதையும் வழங்கப்பட்டது.

குறிப்பாக விமானப்படைத் தளத்திற்கும் பொதுவாக விமானப்படைக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக பின்வரும் விமானப்படை வீரருக்கு விமானப்படைத் தளபதி பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

கோப்ரல் கஹகல்ல - ரெஜிமென்ட்  III

அதன்பின்பு  தளபதியினால்  சிகிரியா விமானப்படை தளத்தின் தலைமையகம்  தொடக்கம்  அனைத்து பிரிவும் பரீட்சிக்கப்பட்டது  இறுதியாக, விமானப்படைத் தளபதி, தளத்தில் உள்ள அனைத்து சேவை பணியாளர்களிடமும் உரையாற்றினார், தேசத்திற்கும் விமானப்படைக்கும் அவர்கள் அர்ப்பணித்த சேவைக்கு நன்றி தெரிவித்ததோடு, உயர்ந்த தரத்தைப் பேண ஊக்குவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை