பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற “புதுவருட நிகழ்விற்கு ” ஜனாதிபதியின் பாராட்டு.
பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பக்மஹா உலேலா' ஏப்ரல் 10, 2024 அன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி கௌரவ. திரு.ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன, இதனை அமைச்சு உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்குபற்றினர் .

இந்த விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன (ஓய்வு பெற்றவர்), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோர்  கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை