பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ஜெனரலுக்கும் விமானப்படைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு
பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் பி.ஐ.அஸ்ஸலாராச்சி அவர்கள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை  2024 மே 28 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் கீழ், இலங்கை விமானப்படை தொடர்பான எதிர்வரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இதனை நினைவு கூறும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும்  வருகைதந்த பணிப்பாளருக்கும் இடையில் நினைவு சின்னம்கள்  பரிமாற்றமும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை