கட்டுநாயக்க விமானப்படை தளத்தினால் பெண்களின் உடல்நலம் மற்றும் புற்றுநோய் தடுப்புக்கான நலன்புரி மகளிர் சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது.
10:23pm on Wednesday 5th June 2024
திருமணமான பெண் உத்தியோகத்தர்கள், விமானப் பெண்கள், சேவைப் பணியாளர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பெண் சிவில் ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 2024 ஜூன் 01 அன்று கட்டுநாயக்க விமானப்படை வைத்தியசாலையில் "நலன்புரி மகளிர் சிகிச்சை" ஏற்பாடு செய்யப்பட்டது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (டாக்டர்) லலித் ஜயவீர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்டுநாயக்க விமானப்படை வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிஏவி பத்மபெரும அவர்களின் மேற்பார்வையின் கீழ் சீதுவையிலுள்ள MOH அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு சீதுவ உதவி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.ஜி.எஃப் சேனாரத்ன பங்களிப்பு செய்தார்.

35 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் தடுக்கக்கூடிய புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. இதில் பங்கேற்கும் அனைத்து பெண்களுக்கும் இலவச மற்றும் ரகசியமான சுகாதார சேவைகளும் வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை