கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தின் புதிய தலைவராக விமானப்படை தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் 6வது வருடாந்த பொதுக்கூட்டம் 2024 ஜூன் 13 அன்று நடைபெற்றது. இதன் புதிய தலைவராக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் மற்றும் பாதுகாப்புக் கல்வியில் அதன் தொடர்ச்சியான பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் சிறப்பு விருந்தினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது.

வருடாந்த பொதுக் கூட்டத்தின் சம்பிரதாயங்கள் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் ரேணுக ரோவல் (ஓய்வு), கொமடோர் ஸ்ரீமால் டி சில்வா மற்றும் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க உள்ளிட்ட முக்கிய சங்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்துடனான அவர்களின் நீடித்த தொடர்பையும் அர்ப்பணிப்பையும் அடையாளப்படுத்தும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உறுப்பினர் அட்டைகள் சம்பிரதாயபூர்வமாக மாலையில் வழங்கி வைக்கப்பட்டது. எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் மேஜர் ஜெனரல் ரேணுக ரோவல் (ஓய்வு) விழாவிற்கு பாரம்பரியம் மற்றும் கண்ணியம் சேர்க்கும் வகையில் விழாவை நிறைவேற்றினர்.

இந்த நிகழ்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் , ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, பழைய மாணவர்கள், முப்படைகளின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், பழைய மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை