முழு இரவு பிரித் ஓதுதல் நிகழ்வு
2024 ஆம் ஆண்டு விமானப்படை போர்வீரர் கொண்டாட்டத்துடன் இணைந்து, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின்படி, வருடாந்த முழு இரவு பீரித் ஓதுதல் விழா 2024  ஜூன் 14, அன்று ஏகல விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.

பொதுநல பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையில் ஏகல விமானப்படை வர்த்தக பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் உதித பியசேனவின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்த போர்வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர்வீரர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக இந்த பிங்கம ஏற்பாடு செய்யப்பட்டது.

வைபவம் ஆரம்பமாவதற்கு முன்னர் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் 'ரெலிக் ஹவுஸ்' (கரடுவ) விமானப்படை தொழிற்பயிற்சிப் பாடசாலையின்  சிற்றுண்டிச்சாலைக்கு வண்ணமயமான ஊர்வலமாக கொண்டுவந்து பிரித் மண்டபத்தில் வைத்தார்.

தலைமை பணிப்பாளர்கள்  பிரதிப் பணிப்பாளர்கள் , விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது அன்பான குடும்பங்கள், ஏகல விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி, முகாம் கட்டளை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அனைத்து அதிகாரிகள் மற்றும் பல அணிகள் பிரித் ஓதுதல் நிகழ்வில் பங்கேற்றனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை