ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நலன்புரி வசதி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் (DHQC) நலன்புரி வசதி வளாகத்தின் அடிக்கல் 2024 ஜூன் 20 அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் நாட்டப்பட்டது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன, விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், திட்ட முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரோஹான் பத்திரகே, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே  விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ருவன் சந்திம  அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தெற்கு தலங்கம பிரதேசத்தில் 40 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிர்மாணப்பணிகள் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வசதியான அங்காடி, கேண்டீன் மற்றும் பொழுதுபோக்கு பகுதி ஆகியவற்றைக் கொண்ட இந்தத் திட்டம், ஆயுதப்படை வீரர்களின் அத்தியாவசிய மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு அவர்களின் உடல்நலம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை