விமானப்படை தளங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சாம்பியன்ஷிப் -2024
1:33pm on Thursday 18th July 2024
2024 ஆம் ஆண்டிற்கான விமானப்படை தளங்களுக்கு இடையிலான கிரிக்கெட் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் 24 ஜூன் 2024 அன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிறைவடைந்தது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜயவீர  இந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஆண்களுக்கான சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு விமானப்படை தளமும் பெண்களுக்கான சம்பியன்ஷிப் போட்டியில் கட்டுநாயக்க விமானப்படை தளமும் வெற்றி பெற்றன. ஆடவருக்கான இறுதிப் போட்டியில் விமானப்படை தளம் ரத்மலானை 15.2 ஓவர்களில் 63/10 எனப் பெற்று, பதில் இன்னிங்சை விளையாடிய கொழும்பு விமானப்படைத் தளம் 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் விமானப்படை ஏகல தொழிற்பயிற்சிப் பாடசாலை 05 ஓவர்களில் 92/3 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விமானப்படை கட்டுநாயக்க அணி 05 ஓவர்களில் 76/2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் சமிந்த விக்ரமரத்ன, கட்டுநாயக்க விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா, விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் டபிள்யூ.ஏ.எஸ்.பி.வீரசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை