விமானப்படை விளையாட்டு வீரர்கள் 2024 ஜனாதிபதி கோப்பை சாம்பியன்ஷிப்பை வென்றனர்.
றோயல் காலேஜ் யூனியன் அக்வாடிக் கிளப் (RCUAC) மற்றும் யூத் விஷன் 2048 ஆகியவற்றுடன் இணைந்து தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஜனாதிபதி கோப்பை 2024 ஜூன் 29 முதல் ஜூன் 30 வரை சுகததாச நீச்சல் குள வளாகத்தில் நடைபெற்றது.

ஓல்ட் தோமியன் நீச்சல் கழகத்திற்கு (OTSC) எதிரான இறுதிப் போட்டியில் 10க்கு 9 என்ற கணக்கில் திறந்த ஆண்கள் ஜனாதிபதி கோப்பையை விமானப்படை ஆண்கள் அணி வென்றது.தி ஓல்ட் தோமியன்ஸ் ஸ்விம்மிங் கிளப்பிற்கு (OTSC) எதிரான இறுதிப் போட்டியில் விமானப்படை பெண்கள் திறந்த மகளிர் ஜனாதிபதி கோப்பையை 11க்கு 8 என்ற கணக்கில் வென்றனர்.

ஆடவர் திறந்த போட்டிகான சிறந்த வீரராக பிளைன் அதிகாரி  இசிவருண டி ​​சில்வா மற்றும் மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக சிரேஷ்ட வான் படை வீராங்கனை  டி சில்வா தேர்வுசெய்யப்பட்டார் .

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி செயலக  தலைமைப் பணிப்பாளர் கௌரவ. திரு.சாகல ரத்நாயக்க அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்து கொண்டார்.
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை