
இன்டர்-யூனிட் கேரம் சாம்பியன்ஷிப் - 2024
9:44am on Tuesday 30th July 2024
2024 ஆம் ஆண்டிற்கான விமானப்படை தளங்களுக்கு இடையிலான கேரம் சாம்பியன்ஷிப் 09 ஜூலை 2024 அன்று கொழும்பு இலங்கை விமானப்படை சுகாதார முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது.
இரண்டு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் 11 பெண்கள் அணிகளும் 13 ஆண்கள் அணிகளும் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட்டன. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே விமானப்படை தளம் 2024 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது, விமானப்படை தளம் கட்டுநாயக்க மற்றும் விமானப்படை தளம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தொழில்நுட்ப செயலாக்க அணி முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கு இரண்டாம் இடத்தைப் பிடித்தன.
இந்த போட்டியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிறந்த வீரர்களாக ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப்படை தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சார்ஜன்ட் மதுரவே பி.பி மற்றும் சார்ஜன்ட் ஜீவனி ஆர்.பி. விருதுகள் பெற்றார்.
இந்த நிகழ்வில் விமானப்படை விளையாட்டு பணிப்பாளர், ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி , விமானப்படை விளையாட்டு சபையின் செயலாளர் மற்றும் விமானப்படை விளையாட்டு சபை உறுப்பினர்கள், விமானப்படை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள், ஏனைய அதிகாரிகள் மற்றும் இலங்கை கெரம் சம்மேளன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






















இரண்டு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் 11 பெண்கள் அணிகளும் 13 ஆண்கள் அணிகளும் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட்டன. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே விமானப்படை தளம் 2024 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது, விமானப்படை தளம் கட்டுநாயக்க மற்றும் விமானப்படை தளம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தொழில்நுட்ப செயலாக்க அணி முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கு இரண்டாம் இடத்தைப் பிடித்தன.
இந்த போட்டியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிறந்த வீரர்களாக ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப்படை தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சார்ஜன்ட் மதுரவே பி.பி மற்றும் சார்ஜன்ட் ஜீவனி ஆர்.பி. விருதுகள் பெற்றார்.
இந்த நிகழ்வில் விமானப்படை விளையாட்டு பணிப்பாளர், ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி , விமானப்படை விளையாட்டு சபையின் செயலாளர் மற்றும் விமானப்படை விளையாட்டு சபை உறுப்பினர்கள், விமானப்படை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள், ஏனைய அதிகாரிகள் மற்றும் இலங்கை கெரம் சம்மேளன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





















