இன்டர்-யூனிட் மல்யுத்த சாம்பியன்ஷிப் 2024
9:56am on Tuesday 30th July 2024
விமானப்படை தளங்களுக்கு இடையிலான  மல்யுத்த சாம்பியன்ஷிப் 2024 ஜூலை 09 முதல் 11 வரை கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில்   நடைபெற்றது. இந்நிகழ்வில் விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ஜிஹான் செனவிரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

ஆடவர் பிரிவில் விமானப்படை தளம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே சம்பியன்ஷிப்பை சுவீகரித்ததோடு, இரண்டாம் இடத்தை வவுனியா விமானப்படை தளம் பெற்றது. பெண்களுக்கான சம்பியன்ஷிப் போட்டியில் கட்டுநாயக்க விமானப்படை தளம் வெற்றியீட்டியதுடன், விமானப்படை ஏகல தொழிற்பயிற்சிப் பாடசாலை இரண்டாம் இடத்தைப் பெற்றது

ஆண் மற்றும் பெண் பிரிவுகளுக்கான 'சிறந்த டெஸ்ட் தொழில்நுட்ப மல்யுத்த வீரர்' விருதுகளை முறையே இலங்கை விமானப்படையின் தியத்தலாவ போர் பயிற்சி பள்ளியின் ஸ்குவாட்ரன் லீடர் அர்த்த ரணசிங்க மற்றும் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கோப்ரல் பிரிகிகா டபிள்யூ.எல். ஆகியோர் பெற்றனர்.

இந்த நிகழ்வில் விமானப்படை மல்யுத்த அணி தலைவர், விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பிற அணியினர் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை