
தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பள்ளி காட்டு தீயை கட்டுப்படுத்தப்பட்டது.
பதுளையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) வேண்டுகோளுக்கு இணங்க, பேரிடர் உதவி மற்றும் பதிலளிப்புக் குழு (DART) மற்றும் தியத்தலாவை SLAF போர் பயிற்சி பள்ளியின் பணியாளர்கள், ஒரு அதிகாரி மற்றும் 16 விமானப் பணியாளர்களை உள்ளடக்கிய குழுவினர் (ஜூலை 22, 2024) வெலிமட , லுனுவத்த, கொறடேகுபுர காட்டுப் பகுதி பெரிய அளவிலான காட்டுத்தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தினர்.
தியத்தலாவை விமானப்படை போர் பயிற்சி பள்ளியின் கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், அதிகாரிகள் மற்றும் விமானப்படையினர் உடனடியாக குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று இரண்டு நாட்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.





