
மகளிர் ஆசியக் கோப்பை டி20 2024 இல் சிறப்பாகச் செயல்பட்டதற்காக பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு விமானப்படைத் தளபதி பாராட்டு.
2024 ஆசியக்கிண்ண மகளிர் T 20 கிண்ண தொடரில் வெற்றிபெற்ற இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை விமானப்படை வீராங்கனைகளாகிய சார்ஜென்ட் பெர்னாண்டோ மற்றும் கோப்ரல் கதிராராச்சியின் டி.ஏ.கே. ஆகிய விளையாட்டு வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் இலங்கைக்கு அவர்கள் கொண்டு வந்த கெளரவத்திற்காக கௌரவிக்கப்பட்டனர்.
விமானப்படையின் கௌரவத்தை உயர்த்துவதில் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விமானப்படைத் தளபதி இரண்டு பெண் கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டினார். மேலும், விமானப்படையின் கெளரவத்தை நிலைநிறுத்துமாறு விமானப்படைத் தளபதி அவர்களை வலியுறுத்தியதுடன், சர்வதேச மட்டத்தில் தொடர்ச்சியான வெற்றிகளை அடைய அவர்களை ஊக்குவித்தார்.
விமானப்படையின் கௌரவத்தை உயர்த்துவதில் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விமானப்படைத் தளபதி இரண்டு பெண் கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டினார். மேலும், விமானப்படையின் கெளரவத்தை நிலைநிறுத்துமாறு விமானப்படைத் தளபதி அவர்களை வலியுறுத்தியதுடன், சர்வதேச மட்டத்தில் தொடர்ச்சியான வெற்றிகளை அடைய அவர்களை ஊக்குவித்தார்.