கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு அதன் 9 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
6:23pm on Thursday 5th September 2024
கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு 05 ஆகஸ்ட் 2024 அன்று தனது 9 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இலங்கை விமானப்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திறன்களை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கம் மற்றும் உள்ளூர் அபிவிருத்திகளை மேம்படுத்தும் முதன்மை நோக்குடன் 2015 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு நிறுவப்பட்டது. இலங்கை விமானப்படையின் அனைத்து அமைப்புகளின்படி, அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதோடு, இலங்கை விமானப்படையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பிரதாய வேலை அணிவகுப்புடன் ஆரம்பமான வருடாந்த  நிறைவு  தினத்துடன் இணைந்து படைத்தள வளாகத்தில் மர நடுகை நிகழ்ச்சி நடைபெற்றதுடன், விமானப்படை கட்டுநாயக்க தளத்தின் வைத்தியசாலை மைதானத்தில் அனைவரின் பங்களிப்புடன் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் திகதி ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்டுநாயக்க லக்ஷ்மி சிறுவர் இல்லத்தில் கட்டளை அதிகாரி, அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளின் பங்குபற்றுதலுடன் சிரமதானம் மற்றும்  அன்னதானமும் வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை