மொன்டானா மாநிலத்தின் துணை ஜெனரல் மற்றும் மொன்டானா தேசிய பாதுகாப்பு கட்டளை அதிகாரி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு
6:25pm on Thursday 5th September 2024
மொன்டானா மாகாணத்தின் துணை ஜெனரல் மற்றும் மொன்டானா தேசிய பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பீட் ஹ்ரோனெக்   2024  ஆகஸ்ட் 7,அன்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

தற்போது நடைபெற்று வரும் 'அட்லஸ் ஏஞ்சல்' பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டதுடன், எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மொன்டானா தேசிய காவலர்களுடனான பயிற்சி வாய்ப்புகள் தொடர்பான முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அந்தோனி நெல்சன் மற்றும் மொன்டானா தேசிய பாதுகாப்பு படையின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். சுமுகமான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை