தியத்தலாவ போர் பயிற்சி பாடசாலை விமானப்படை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வை நடாத்தியது.
இலங்கை விமானப்படை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன், தலைமைத்துவம் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் மூன்று நாள் செயலமர்வு தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பள்ளியில் (CTS) 2024 ஆகஸ்ட் 12 முதல் 14 வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ மற்றும் நலன்புரி பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் சுரேஷ் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

தியத்தலாவ போர் பயிற்சி பள்ளியின் தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளர் கலாநிதி துஷாரி கோரலகே, திருமதி விஹானி தென்னகோன், விங் கமாண்டர் சானக மாலிகஸ்பே மற்றும் பயிற்றுனர்களால் நடத்தப்பட்ட இந்த செயலமர்வில், மேம்பட்ட பயிற்றுவிக்கும் நுட்பங்கள், செயல்விளக்கம், வகுப்பறை மேலாண்மை, தலைமைத்துவம், ஊக்குவிப்பு, அனைத்து கற்பித்தல் பாடங்கள் பற்றிய விரிவுரைகளும் இடம்பெற்றன படை முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நலன்புரி பணிப்பாளர் நாயகம் எயார் கொமடோர் சுலோச்சனா மாரப்பெரும மற்றும் தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ஹுமால் தர்மதாச ஆகியோர் கலந்துகொண்டனர்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை