விமானப்படைத் தளம் ஹிகுரக்கொட சிறிகெத்த ஆரம்பப் பாடசாலையில் வான் நட்புறவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது.
இலங்கை விமானப்படை ஹிகுரகொட தளத்தின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விமான நட்புறவு சமூக சேவை திட்டம் 2024 ஆகஸ்ட் 15 ஆம் திகதி சிறிகெத்த ஆரம்ப பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  ஹிங்குரகோட விமானப்படை தள பதில்  கட்டளை அதிகாரி குரூப் கப்டன் எம்.எம்.ஏ.மென்டிஸ் கலந்து கொண்டு, ஹிகுராக்கொட, சிறிகெத்த ஆரம்ப பாடசாலையில் நவீனமயமாக்கப்பட்ட ஜலகராம அமைப்பை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

ஹிகுராக்கொட விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் தினேஷ் ஜயவீரவின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், பொறுப்பதிகாரிஸ்கொற்றன் லீடர்  பிரபாத் வீரசுந்தரவினால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த திட்டமானது விமானப்படை தலைமையகத்தின் சேவா வனிதா பிரிவினால் முழுமையாக நிதியளிக்கப்பட்டதுடன், ஹிகுரக்கொட விமானப்படை  தளத்தின் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை