'AERO BASH 2024' கல்வி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைகிறது.
இலங்கை விமானப்படை சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டு ஐந்து நாட்கள் நடைபெற்ற 'AERO BASH 2024' கல்வி, தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சி 26 ஆகஸ்ட் 2024 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. திருகோணமலையின் இளம் தலைமுறையினருக்கு புதிய அறிவை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி நடத்தப்பட்ட இந்த தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சி, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அறிவையும் வேடிக்கையையும் பகிர்ந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

ஐந்து நாட்களில், ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையின் பாராசூட்டிங் நிகழ்ச்சிகள், தீயணைப்பு நிகழ்ச்சிகள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண (HADR) நிகழ்ச்சிகள், நாய் நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் காண முடிந்தது.

'AERO BASH 2024' கல்வி, தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சியின் தொடக்க நாளில், திருகோணமலையில் உள்ள சாகச ஆர்வலர்கள் டேன்டெம் ஜம்ப்ஸின் சிலிர்ப்பை அனுபவித்தனர், மேலும் பங்கேற்பாளர்கள் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் அனுபவங்களுடன் இந்த நிகழ்வுகள் நிறைவடைந்து.

 'AERO BASH 2024' கல்வி, தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற எயார் சீஃப் மார்ஷல் கபில ஜயம்பதி, நிர்வாக பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் மனோஜ் கப்பட்டிபொல மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை