
இரத்மலானை விமானப்படை தளத்தில் "லிட்டில் வொண்டர்ஸ்" பாலர் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி ரத்மலானை விமானப்படைத் தளத்தில் "லிட்டில் வொண்டர்ஸ்" பாலர் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ, நிர்மாண பொறியியல் பணிப்பாளர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் சந்தன கீதப்பிரிய, பொது நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுரேஷ் பெர்னாண்டோ, விமானப்படை தள முகாம் தளபதி இரத்மலானை. எயார் கொமடோர் அசேல ஜயசேகர மற்றும் முன்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி இனோகா மதுராணி ஆகியோரின் பங்களிப்புடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
1998 இல் திறக்கப்பட்ட தற்போதைய முன்பள்ளியானது, பகல்நேர பராமரிப்பு நிலையம், கேட்போர் கூடம், செயற்பாட்டு அறை, பணியாளர்கள், அலுவலக அறைகள் மற்றும் பயன்பாட்டு அறையுடன் கூடிய நவீன இரண்டு மாடிக் கட்டிடமாக புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்திட்டத்தை இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்ததன் அடையாளமாக, உத்தேச கட்டிடத்தின் 3D மாதிரியானது விமானப்படை தளபதியினால் சேவை வனிதா பிரிவின் தலைவரிடம் வழங்கப்பட்டது.




















இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ, நிர்மாண பொறியியல் பணிப்பாளர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் சந்தன கீதப்பிரிய, பொது நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுரேஷ் பெர்னாண்டோ, விமானப்படை தள முகாம் தளபதி இரத்மலானை. எயார் கொமடோர் அசேல ஜயசேகர மற்றும் முன்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி இனோகா மதுராணி ஆகியோரின் பங்களிப்புடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
1998 இல் திறக்கப்பட்ட தற்போதைய முன்பள்ளியானது, பகல்நேர பராமரிப்பு நிலையம், கேட்போர் கூடம், செயற்பாட்டு அறை, பணியாளர்கள், அலுவலக அறைகள் மற்றும் பயன்பாட்டு அறையுடன் கூடிய நவீன இரண்டு மாடிக் கட்டிடமாக புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்திட்டத்தை இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்ததன் அடையாளமாக, உத்தேச கட்டிடத்தின் 3D மாதிரியானது விமானப்படை தளபதியினால் சேவை வனிதா பிரிவின் தலைவரிடம் வழங்கப்பட்டது.



















