'குவன் ரந்தரு சித்தம்' கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கலைப் பட்டறை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா
11:18am on Monday 7th October 2024

 2024  அக்டோபர் 1ம் திகைத்தி ,அன்று உலக குழந்தைகள் தினம் 2024 கொண்டாட்டங்களுடன் இணைந்து, விமானப்படை சேவை வனிதா பிரிவு விமானப்படை வீரர்களின் குழந்தைகளுக்கான "விமானப்படை ஓவியப் போட்டியை" ஏற்பாடு செய்தது. இப்போட்டியில் 319 சிறுவர்கள் பங்குபற்றியதுடன், ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் வெற்றியாளர்களை நவீன இலங்கை சமூகத்தின் சக்தி வாய்ந்த கலைஞர்களான திரு.சுதத் அபேசேகர மற்றும் திருமதி அச்சலா குணவர்தன ஆகியோர் தெரிவு செய்தனர்.

விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷவின் புதிய கருத்தாக்கத்தின்படி, வெற்றி பெற்ற 39 குழந்தைகளுக்கு கலை அறிவு மற்றும் திறன்களை வழங்கும் நோக்கில், 2024   செப்டம்பர் 18,அன்று விமானப்படை அருங்காட்சியக வளாகத்தில் ஒரு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. புகழ்பெற்ற கலைஞர்களான திரு. சுதத் அபேசேகர மற்றும் திருமதி அச்சலா குணவர்தன ஆகியோரால் இந்த நடைமுறைப் பட்டறை நடத்தப்பட்டது

'குவன் ரந்தரு சித்தம்' ஓவியப் போட்டியின் சான்றிதழ் வழங்கும் விழா 2024 செப்டம்பர் 20 அன்று விமானப்படைத் தலைமையக வளாகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விமானப்படை முகாமைத்துவ சபையின் அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் மற்றும் விசேட அதிதிகளான திரு.சுதத் அபேசேகர, திருமதி அச்சலா குணவர்தன மற்றும் வெற்றி பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை