
விமானப்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 04 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை ஜனாதிபதி செயலகத்தில் நடத்தினார்.
சுமுகமான கலந்துரையாடலின் பின்னர், இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் வகையில் விமானப்படைத் தளபதி ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

