
அமைதிகாக்கும் பணிபக்கு மத்திய ஆப்ரிக்கா செல்லும் விமானப்படை
மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக செல்லவுள்ள இலங்கை விமானப்படை உறுப்பினர்களின் அணிவகுப்பு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் 05 நவம்பர் 2024 ம் திகதி நடைபெற்றது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக புறப்படவுள்ள இலங்கை விமானப்படையின் 10வது குழுவில் 20 அதிகாரிகளும் 88 படைவீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை விமானப்படை அமைதி காக்கும் கடமைகளில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரிக்கு வழங்கியுள்ளது.
ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படை உறுப்பினர்கள், மத்திய ஆபிரிக்க குடியரசில் போர் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பதோடு, துருப்பு போக்குவரத்து, விஐபி போக்குவரத்து, உணவு மற்றும் சரக்கு போக்குவரத்து, உள் விமானங்கள், பாராசூட் தரையிறக்கம், மருத்துவ போக்குவரத்துக்கு ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்கிவருகிறது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக புறப்படவுள்ள இலங்கை விமானப்படையின் 10வது குழுவில் 20 அதிகாரிகளும் 88 படைவீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை விமானப்படை அமைதி காக்கும் கடமைகளில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரிக்கு வழங்கியுள்ளது.
ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படை உறுப்பினர்கள், மத்திய ஆபிரிக்க குடியரசில் போர் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பதோடு, துருப்பு போக்குவரத்து, விஐபி போக்குவரத்து, உணவு மற்றும் சரக்கு போக்குவரத்து, உள் விமானங்கள், பாராசூட் தரையிறக்கம், மருத்துவ போக்குவரத்துக்கு ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்கிவருகிறது.