2024 - ஈகிள் கோப்பை கரப்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
7:09pm on Thursday 30th January 2025
ஈகிள் கோப்பை கரப்பந்தாட்டப் போட்டியின் 3வது கட்டம் 2024 நவம்பர் 17 முதல் 20 வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக எயார்   மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கலந்து கொண்டார். முப்படை கரப்பந்தாட்ட அணிகள், ஏனைய பிராந்திய கரப்பந்தாட்ட கழகங்கள் மற்றும் பாடசாலை மட்ட கரப்பந்தாட்ட கழகங்களின் வீரர்களை உள்ளடக்கிய இந்நிகழ்வில் ஆண்கள் பிரிவில் இருந்து ஒன்பது அணிகளும், பெண்கள் பிரிவில் இருந்து ஆறு அணிகளும் கலந்து கொண்டன.

மகளிர் அணி சாம்பியன்ஷிப்பில், இலங்கை விமானப்படை போட்டி முழுவதும் சிறப்பான உத்திகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற முடிந்தது. இரண்டாம் இடத்தை இலங்கை இராணுவம் பெற்றது. ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவடைந்த கடினமான இறுதிப் போட்டியின் பின்னர் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றது.

ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை அணிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவியதுடன், நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் இரு அணிகளும் 38 புள்ளிகளைப் பெற்றிருந்தன. தொடர்ந்து கிடைத்த பெனால்டி உதையில் இலங்கை ராணுவ அணி அபார வெற்றி பெற்றது. இதேவேளை, பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை விமானப்படை 22-18 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை இராணுவத்தை தோற்கடித்தது.

இந்நிகழ்வில் பிரதிப் பதவிநிலை பிரதானி,  விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், விமானப்படை கரப்பந்தாட்டத் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரஜிந்த் ஜயவர்தன, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் உபாலி ராஜபக்ஷ, விமானப்படை விளையாட்டு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள்  கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை