ஒய்வு பெறவுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்தார்
விடைபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டாவை (ஓய்வு) 2025 ஜனவரி 27 அன்று அமைச்சின் வளாகத்தில் சந்தித்தார்.

ஒரு சுருக்கமான கலந்துரையாடலுக்குப் பிறகு, எயார்  மார்ஷல் ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார், மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு செயலாளருக்கு ஒரு நினைவுப் பரிசையும் வழங்கினார். எயார்  வைஸ் மார்ஷல் துய்யகொண்டா (ஓய்வு) எயார் மார்ஷல் ராஜபக்ஷவுக்கு ஒரு நினைவுப் பரிசையும் வழங்கினார், தேசத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு மற்றும் சிறப்புமிக்க சேவையைப் பாராட்டி, அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் வெற்றிபெற வாழ்த்தினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை