
விமானப்படைத் தளபதி அனுராதபுரத்தில் உள்ள புனித ஜெய ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு செய்து தனது புதிய நியமனத்திற்கு ஆசீர்வாதம் பெற்றார்
பாரம்பரியத்திற்கு இணங்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, 2025 பிப்ரவரி 15, அன்று அனுராதபுரத்தில் உள்ள புனித ஜெய ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு செய்து, தனது புதிய நியமனத்திற்கான ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த விஜயத்தின் போது, அவர் ருவன்வெலி மகா சேயவிற்கும் வழிபாடுகளை மேற்கொண்டதுடன், நுவர கலைவியாவின் பிரதான சங்கநாயக்கரும், எட்டாவது பீடத்தின் பீடாதிபதியும், ருவன்வெலி மகா சேயவின் பிரதான சங்கநாயக்கருமான அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
மத சடங்குகளை நிறைவேற்றிய விமானப்படைத் தளபதி, புனித ருவன்வெலி சேயவிற்கு விஜயம் செய்தார், அங்கு அவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மிரிசவெட்டிய விஹாரையின் பிரதம அதிபருமான வணக்கத்திற்குரிய எதவெடுனவெவ ஞானதிலக தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
அனுராதபுரத்தில் ஆசீர்வாதங்களைப் பெற்ற பிறகு, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க வரலாற்று சிறப்புமிக்க இசுருமுனியா கோயிலுக்குச் சென்று வழிபட்டார், அங்கு அவர் மல்வத்த பிரிவின் தலைமை சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய ஸ்ரீ சங்கரக்கித சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க, அனுராதபுரம் தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பூஜன குணதிலக மற்றும் பல விமானப்படை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மத சடங்குகளை நிறைவேற்றிய விமானப்படைத் தளபதி, புனித ருவன்வெலி சேயவிற்கு விஜயம் செய்தார், அங்கு அவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மிரிசவெட்டிய விஹாரையின் பிரதம அதிபருமான வணக்கத்திற்குரிய எதவெடுனவெவ ஞானதிலக தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
அனுராதபுரத்தில் ஆசீர்வாதங்களைப் பெற்ற பிறகு, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க வரலாற்று சிறப்புமிக்க இசுருமுனியா கோயிலுக்குச் சென்று வழிபட்டார், அங்கு அவர் மல்வத்த பிரிவின் தலைமை சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய ஸ்ரீ சங்கரக்கித சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க, அனுராதபுரம் தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பூஜன குணதிலக மற்றும் பல விமானப்படை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.