விமானப்படைத் தளபதி தனது புதிய நியமனம் மற்றும் எதிர்காலப் பொறுப்புகளுக்காக அனைத்து மதத்தினரின் ஆசிகளையும் பெறுகிறார்
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க தனது புதிய நியமனம் மற்றும் எதிர்கால பொறுப்புகளுக்காக ஆசி பெறுவதற்காக 2025 பிப்ரவரி 16 அன்று பல மதத் தலங்களுக்குச் சென்றார்.
மத அனுஷ்டானங்களின் ஒரு பகுதியாக, விமானப்படைத் தளபதி முதலில் கொழும்பில் உள்ள கங்காராமய விகாரைக்குச் சென்றார், அங்கு அவர் வணக்கத்திற்குரிய கிரிந்தே அசாஜி தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் அவர் கோட்டஹேனாவில் உள்ள ஸ்ரீ பொன்னம்பலவனேஸ்வரன் சிவன் கோயிலுக்குச் சென்று, இந்து மரபுகளின்படி பிரார்த்தனை செய்தார்.
பின்னர் , எயார் மார்ஷல் எதிரிசிங்க தேவதகஹா மசூதியில் அஞ்சலி செலுத்தினார், அங்கு அவரை அறக்கட்டளை உறுப்பினர்கள் வரவேற்றனர். இக்பால் மௌலவி அவர்களினால் புதிய விமானப்படை தளபதிக்கும் இலங்கை விமானப்படைக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினார்.
இந்நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க, ரணவிரு நலத்துறை இயக்குநர் எயார் கொமடோர் புத்திக பியசிறி மற்றும் விமானப்படையின் பல மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் , எயார் மார்ஷல் எதிரிசிங்க தேவதகஹா மசூதியில் அஞ்சலி செலுத்தினார், அங்கு அவரை அறக்கட்டளை உறுப்பினர்கள் வரவேற்றனர். இக்பால் மௌலவி அவர்களினால் புதிய விமானப்படை தளபதிக்கும் இலங்கை விமானப்படைக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினார்.
இந்நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க, ரணவிரு நலத்துறை இயக்குநர் எயார் கொமடோர் புத்திக பியசிறி மற்றும் விமானப்படையின் பல மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Gangaramaya
Temple
Sri
Ponnambalawaneswaran Sivan Temple in
Kotahena
Dawatagaha
Mosque