
ஜனாதிபதிக்கும் விமானப்படை மூத்த அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை விமானப்படையின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு 2025 மார்ச் 27 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு விமானப்படையாக இலங்கை விமானப்படையை மேம்படுத்துவது குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு விமானப்படையின் ஆதரவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு விமானப்படையாக இலங்கை விமானப்படையை மேம்படுத்துவது குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு விமானப்படையின் ஆதரவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.