இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வருடாந்திர “பிச்சமல் பூஜை” நடைபெறுகிறது.
"வானின்  பாதுகாவலர்கள்" எனும்  தனது 74வது ஆண்டு நிறைவைக் கொண்டாடத் தயாராகி வரும் இலங்கை விமானப்படை, களனி ரஜ மகா விஹாரையில் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக "பிச்ச மல் பூஜை" நடத்தியது. விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை விமானப்படை தலைமையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, விமானப்படை அதிகாரிகள் மற்றும் முழு விமானப்படையினருக்கும் ஆசீர்வாதம் கோரி,  2025 பெப்ரவரி 27, அன்று மாலை நடைபெற்றது. விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

விமானப்படை மேலாண்மை வாரிய உறுப்பினர்கள், தள கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரிவுகளின் கட்டளை  அதிகாரிகள், விமானப்படை தலைமையகம் மற்றும் பிற விமானப்படை தளங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை