2025 இன்டர்-யூனிட் வுஷு சாம்பியன்ஷிப்
2025 ஆம் ஆண்டுக்கான இன்டர்-யூனிட் வுஷு சாம்பியன்ஷிப் போட்டி 2025  பெப்ரவரி 28, அன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிறைவடைந்தது. இறுதிப் போட்டி மற்றும் விருது வழங்கும் விழா விமானப்படை கட்டுநாயக்க உடற்கட்டமைப்பு மையத்தில் நடைபெற்றது, கட்டுமான பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் சந்தன கீதபிரிய பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஆண்களுக்கான சாம்பியன்ஷிப்பை ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை தளம் வென்றது, அதே நேரத்தில் பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை விமானப்படை ஏகல தொழிற்பயிற்சி பள்ளி வென்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இரத்மலானை விமானப்படை தளம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இந்நிகழ்வில் விமானப்படை வுஷு கூட்டமைப்பின் தலைவர் எயார் கொமடோர் சுலோச்சனா மாரப்பெரும, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை