
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் நாயகம் விமானப்படைத் தளபதியை சந்தித்தார்
பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் நாயகம் கொமடோர் ஜனக குணசீல, விமானப்படைத் தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 01, அன்று விமானப்படைத் தளபதியை சந்தித்தார்.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் கீழ் இலங்கை விமானப்படையுடன் தொடர்புடைய எதிர்கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதிக்கும் சிறப்பு விருந்தினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.