ஜப்பான்-இலங்கை நட்புறவு சங்கம் இலங்கை விமானப்படைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் உதவித்தொகைகளை நன்கொடையாக வழங்குகிறது
ஜப்பான்-இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் திரு. கோட்டோ ஹிடேகி, ஏ-குளோபல் சங்கத்தின் தலைவி  திருமதி. ஜின் சோங்யு மற்றும் தூதுக்குழுவின் பிற உறுப்பினர்களின் தாராள ஆதரவுடன், ஒரு தீயணைப்பு இப்படை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கயந்திரம் மற்றும் ஒரு நிசான் ஆம்புலன்ஸ், தகுதியான பள்ளி மாணவர்களுக்கான பத்து உதவித்தொகைகள், பென்சில் பெட்டிகள் மற்றும் வாசிப்பு  கண்ணாடிகள் ஆகியவை 2025 மே 16,  அன்று விமானவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

இந்த நன்கொடையைப் பாராட்டி, ஜப்பானிய தூதுக்குழுவிற்கு இந்த நாளை மறக்கமுடியாததாக மாற்றும் நோக்கில் விமானப்படை தலைமையகத்தில் ஒரு சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. 2015 முதல், ஜப்பான்-இலங்கை நட்புறவு சங்கம் இலங்கை விமானப்படைக்கு ஏராளமான தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் ஜப்பான்-இலங்கை நட்புறவு சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் எரங்க ஹசந்தி, விமானப்படை மேலாண்மை வாரிய உறுப்பினர்கள், ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர்   பியசிறி மற்றும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்  குழு கலந்து கொண்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை