சீனா-இலங்கை நட்புறவு கோப்பை டிராகன் படகு சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை விமானப்படை இரண்டாமிடத்தை பிடித்தது.
சீன-இலங்கை நட்புறவு கோப்பை டிராகன் படகு சாம்பியன்ஷிப் 2025   2025  மே 31, பத்தரமுல்லையிலுள்ள தியவன்னா படகு மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. பாரம்பரிய சீன டிராகன் படகு விழாவை நினைவுகூரும் வகையிலும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பைக் கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம் இணைந்து இந்த தொடரை  ஏற்பாடு செய்தன.  இந்தப் போட்டியில் ஆண்கள் ஓபன், பெண்கள் ஓபன், மாஸ்டர் பெண்கள், கலப்பு, ஜூனியர் ஆண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள்   போட்டிகள் உட்பட பல பிரிவுகளில் போட்டிகள்  இடம்பெற்றன, மேலும் இந்த போட்டிகள்  நாடு முழுவதிலுமிருந்து உயர்மட்ட படகோட்ட திறமையாளர்களை ஈர்த்தன.

சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி, விமானப்படை  அணி ஆண்கள் ஓபன் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதர் கௌரவ . குய் ஜென்ஹோங் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கௌரவ சுனில் குமார் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர். விமானப்படை படகுப் பிரிவின் தலைவர் எயார்  கொமடோர் அசித ஹெட்டியாராச்சி மற்றும் விமானப்படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை