எல்ல பகுதியில் நடந்த பேருந்து விபத்தைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் விமானப்படை வீரர்கள் உதவினர்.
விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், பேரிடர் நிவாரண மற்றும் மீட்புக் குழு (DART) மற்றும் ரெஜிமென்டல் சிறப்புப் படைகள் மற்றும் தியதலாவ விமானப்படை போர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் அடங்கிய குழுவினர் , 2025  செப்டம்பர் 04, அன்று எல்லா-வெல்லவாய சாலை ஏற்பட்ட விபத்தில்  மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், ஒரு பேருந்து கிட்டத்தட்ட ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்தது, மீட்புப் பணிகளை மிகவும் சவாலானதாக மாற்றியது. இந்த நடவடிக்கை இலங்கை இராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களின் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது.

தியதலாவ விமானப்படை போர் பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி எயார்  கொமடோர் ருக்மன் தசநாயக்க மற்றும் எண் 30 படைப்பிரிவுப் பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எம்.எம்.பி.எம். மாரசிங்க ஆகியோரும் மீட்புப் பணியில் பங்கேற்றனர். காயமடைந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பதுளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை