தியதலாவிலுள்ள இலங்கை விமானப்படை போர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு
தியதலாவிலுள்ள இலங்கை விமானப்படை போர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற வழக்கமான, நேரடி நுழைவு மற்றும் தன்னார்வ விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப் பெண்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு 2025 டிசம்பர் 24 அன்று மிகவும் பெருமிதமாக  விழாவுடனும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், எண். 174 நிரந்தர  விமானப்படை வீரர்கள், எண். 44 நிரந்தர  விமானப்படை வீராங்கனைகள் , எண். 42 நேரடி நுழைவு விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப் பெண்கள் மற்றும் எண். 18 தன்னார்வ விமானப் பெண்கள் ஆகியோருக்கான அடிப்படை பயிச்சிகள்  வெற்றிகரமாக  489 பயிற்சியாளர்கள் நிறைவு செய்தனர்.

இந்த அணிவகுப்புக்கு பயிற்சிக்கான செயல் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பிரீபாத் செனவிரத்ன தலைமை தாங்கினார். விமானப்படை வான் நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் எயார்  வைஸ் மார்ஷல் தம்மிக டயஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் விமானப்படை போர் பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் லலித் சுகததாச, அழைக்கப்பட்ட விருந்தினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் கலந்து கொண்டனர். நீண்ட மற்றும் கடினமான அடிப்படை போர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப் பெண்களிடம் உரையாற்றிய தலைமை விருந்தினர், நாட்டின் தற்போதைய தேசியத் தேவைகளுக்கு மத்தியில் தாய்நாட்டிற்கு சேவை செய்வதன் மரியாதை, பொறுப்பு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை