ஏகலவில் உள்ள இலங்கை விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை போர் வீரர்கள் நினைவிடத்தில், விமானப்படையின் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
விமானப்படைத் தளபதி,  எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், ஏகலவில் உள்ள இலங்கை விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை போர் வீரர்கள் நினைவிடத்தில், 2026 ஜூன் 11 அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.

இது விமானப்படையின் நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இது ஆண்டுதோறும் திட்டமிடப்படுகிறது. இவ்வாண்டு நிகழ்வானது, ஏக்கலவில் உள்ள இலங்கை விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி, எயார்  கொமடோர் கொலித அபேசிங்கவின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

விமானப்படை நாட்டுப்பற்றாளர்கள் செய்த உன்னத தியாகத்தை நினைவுகூரும் வகையில், விமானப்படைத் தளபதி நினைவிடத்தில் முதல் மலர் அஞ்சலியைச் செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிரிஷாந்தி எதிரிசிங்க, பிரதி தளபதி, விமானப்படை மேலாண்மைச் சபையின் உறுப்பினர்கள், ஏகலவில் உள்ள விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், நிறைவேற்று தலைமை வாரண்ட் அதிகாரி, பிற தரப்பட்டோர் மற்றும் மறைந்த போர் வீரர்களின் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை