தாய் நாட்டிற்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கு'உத்தம பூஜா'பதக்கம் வழங்கும் வைபவம்.
சமாதானமும் ,சுபீட்ச்சமும் நிறைந்ததொரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களை கொளரவிக்கும் பொருட்டு ' உத்தமபூஜா'பதக்கம் வழங்கும் வைபவம் இன்று காலை பாதுகாப்பு செயளாலர் கொளரவ கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கிங்குரங்கொட  விமானப்படை முகாமில் இடம்பெற்றது .

பொலன்னறுவ,மட்டக்களப்பு,திருகோணமலை,போன்ற பிரதேசங்களில் சேவையில் ஈடுபட்டுக்கொன்டிருக்கும் பொழுது காணாமற்போன மற்றும் உயிரிழந்த வீரர்களின் பெற்றோர்களுக்கு இப் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக பாதுகாப்பு செயளாலர் உட்பட விமானப்படை நலன்புரி அதிகாரி'எயார் வைஸ் மார்சல்'டப்.எ.சில்வா உட்பட முப்படைகளினதும் நலன்புரி அதிகாரிகளும் ,'குரூப் கெப்டன்'சாகர கொடகதெனிய,இராணுவ சேவை அதிகார சபையின் தலைவி.திருமதி .பத்மா வேத்தவ மற்றும் பொலன்னறுவ பிரதேச பொலிஸ் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர் அத்துடன் விழாவின் அடுத்த கட்டமாக கிங்குரங்கொட விமானப்படை தலைமையகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள இல.09எம்.இ.24 கெலிகெப்டர் அணி,இல07 பெல் 212கெலிகெப்டர் அணி,இல03 வினியோகம் மற்றும் பராமரிப்பு அணிகளையும் அதிதிகல் பார்வையிட்டனர்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை