
வடக்குக் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக பதக்கம் அணிவிக்கும் வைபவம்
மூன்று தசாப்த காலங்களாக வடக்குக் கிழக்கு மக்களை பீடித்திருந்த, பயங்கரவாத
நடவடிக்கைகளில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு,
வடக்குக் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்ட முப்படையினர்,
பொலீஸ் மற்றும் பொதுமக்களை கௌரவிக்கும் முகமாக பதக்கம் அணிவிக்கும் வைபவம் 2010
டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி அன்று மிக விமர்சியாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்ட முப்படைகளையும் சேர்ந்த ஆயிரம் படை
வீரர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 680 பேருக்கும் கடற்படையைச் சேர்ந்த 170
பேருக்கும் விமானப்படையைச் சேர்ந்த 85 பேருக்கும் மற்றும் பொலிஸ் துறையைச்
சேர்ந்த 65 பேருக்கும் இவ்வாரு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அலரிமாளிகையில் இன்று காலை இடம் பெற்ற இந் நிகழ்வை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மேலும் பிரதமர், பிரதான அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற
உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க, பாதுகாப்புச்
செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், பொலீஸ் மா அதிபர், மற்றும்
இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









































நடவடிக்கைகளில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு,
வடக்குக் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்ட முப்படையினர்,
பொலீஸ் மற்றும் பொதுமக்களை கௌரவிக்கும் முகமாக பதக்கம் அணிவிக்கும் வைபவம் 2010
டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி அன்று மிக விமர்சியாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்ட முப்படைகளையும் சேர்ந்த ஆயிரம் படை
வீரர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 680 பேருக்கும் கடற்படையைச் சேர்ந்த 170
பேருக்கும் விமானப்படையைச் சேர்ந்த 85 பேருக்கும் மற்றும் பொலிஸ் துறையைச்
சேர்ந்த 65 பேருக்கும் இவ்வாரு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அலரிமாளிகையில் இன்று காலை இடம் பெற்ற இந் நிகழ்வை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மேலும் பிரதமர், பிரதான அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற
உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க, பாதுகாப்புச்
செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், பொலீஸ் மா அதிபர், மற்றும்
இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








































